தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Tuesday 27 September, 2011

'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் கவிதைகள்'

மாற்றம் காணவே!
ரோட்டில் பள்ளம் மேடு எங்கும் பாருங்கள் - கோடை
ஆற்று மணல் காட்சி அங்குப் பாருங்கள்!
போக்குவரவை எச்சரிக்கும் செங்கொடி - அங்கே
ரோட்டின் ஓரம் காற்றிலாடப் பாருங்கள்! பழுது
பார்க்கும் தொழிலாளரைப் பாருங்கள்!
ஏற்றத் தாழ்வு இருக்குமிடம் எங்குமே
மாற்றம் காணவே பறக்கும் செங்கொடி!


பூமி நடுங்குமடா!
ஆளில்லை என்பதாலே
தானென்ற அகங்காரம்
தலைவிரித்து ஆடுதடா
ஊனுருக ஏழைகளின்
உள்ளமெல்லாம் புண்ணாக
உயிரோடு கொல்பவனைக் - காலம்
உயர்வாய் மதிக்குதடா!

பொறுமை ஒருநாள்
பொங்கி எழுந்தால்
பூமி நடுங்குமடா
கொடுமை புரியும் பாதகனை - அவன்
குறைகள் விழுங்குமடா!
காலையாகி மதியமாகி
மாலையானது பலபொழுது,
மாலையாகி பகலும் முடிந்து
இருளில் போனது பல இரவு

ஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன்
வாழ்வெல்லாம் ஒரு நாள் வாழ்வென்றால்
தினம் தீராத வெறியோடு போராடும் மனிதன்
பேராசை நிலைதன்னை என்னென்று சொல்வேன்!

மானம் என்றே மங்கை அழுதால்
இன்ப மென்றே நகைப் பானே
பால வயதில் செய்த வினையை
வாழ்வு முடிவில் நினைப்பானே!

தானாகச் சிரிப்பான் தானாக அழுவான்
காணாத கனவும் காண்பானே - அவன்
ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடிக்
கூனாகி ஊணாகிக் கூடாகிப் போவானே!

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...