தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September, 2011

தமிழ்க் கவிதை

பொருட் சுவை


உன்னவை என்னவை இல்லை என்றேன்
நிம்மதி வந்தது

என்னவை உன்னவை இல்லை என்றேன்
பகை வந்தது

என்னவை என்னதே என்றேன்
தனிமை வந்தது

என்னவை உன்னவை என்றேன்
பாசம் வந்தது

எல்லாம் உம்மவை என்றேன்
பரிசு வந்தது

உன்னவை உன்னவையே என்றேன்
மதிப்பு வந்தது

நம்மவை நம்மவையே என்றேன்
ஒற்றுமை வந்தது

எல்லாம் பொதுமை என்றேன்
பெருமை வந்தது

உன்னவை என்னவை என்றேன்
உரசல் வந்தது

எல்லாம் நம்மவையே என்றேன்
போர் வந்தது

எல்லாம் எனக்கே என்றேன்
துன்பம் வந்தது

எல்லாம் ஏதுக்கு என்றேன்
இன்பம் வந்தது

எல்லாம் இனிமையே என்றேன்
இனிமையே வந்தது

மனது இதுவும் நிரந்தரமல்ல என்றது
ஒழுக்கம் வந்தது

உள்ளத்து உள்ளே உற்றுப் பார்த்தேன்
தியானம் வந்தது

உடலும் உனதல்ல உலகும் உனதல்ல
ஒளி வந்தது

எதுவுமே உனதல்ல யாதுமே நமதல்ல
மோனம் வந்தது

இருத்தலும் வேண்டாம் இரத்தலும் வேண்டாம்
ஞானம் வந்தது

இறத்தல் மட்டும் வந்தால் போதும்
பேரின்பம் என்றது.

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...