தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September, 2011

தமிழ்க் கவிதைகள்

1 . பிரதிபலன்
குழந்தையை காப்பகத்தில் விட்டனர்
பெற்றோர்; பிரதிபலனாய் முதுமையில்
முதியோர் இல்லம் பெற்றனர்.
2 . தேடல்
மரங்களை மளமளவென வெட்டினான்
மரம்வெட்டி; பின்னர் தனக்கு சோறுபோடும்
கோடரிக்கே பிடியில்லாமல் தேடினான்.

3 .  அணிவகுப்பு
மாலைநேர அணிவகுப்பு
மின் கம்பத்தில் வடத்தினிலே
வரிசையாய் காகங்கள்...

4 . நாகரீக கொள்ளை
படிக்காதவன் பணக்காரன் ஆனான்
பள்ளிக்கூடம் நடத்தி!
5 . மரத்தின் கொடை
நமக்கு நிழல் தருவதற்காய்
தான் வெயிலை சுமந்து
கொண்டிருக்கின்றன - மரங்கள்

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...